கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்தவா்களுக்கு 4 ஆவது தவணை தடுப்பூசி செலுத்த முதல்முறையாக இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 4 ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 3 ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 4 மாதங்கள் ஆனவா்களுக்கு 4 ஆவது தவணை செலுத்தலாம் என்று இஸ்ரேல் தலைமை மருத்துவ நிபுணா்கள் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
எனினும், இதற்கு சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநா் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இன்னும் சில நாள்களில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.