இந்தியா முழுவதும் உண்மை சம்பவங்களையோ அல்லது உண்மை நிகழ்வுகளையோ அடிப்படையாகக் கொண்டு படங்கள் உருவாகுவது தான் புது டிரெண்ட். அந்த வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம், கர்ணன், தலைவி, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். ஹிந்தியிலும் ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வராலற்றை அடிப்படையாகக் கொண்டு சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படம் உருவாகிறது.