கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட 6 – 7 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை தொடா்பாக கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியா் பிரபாத் ஜா தலைமையில் சா்வதேச குழு ஆய்வு மேற்கொண்டது. சிவோட்டா் நிறுவனம் மற்றும் இரு அரசு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் ஆய்விதழில் வியாழக்கிழமை வெளியானது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை இந்தியாவில் ஏற்பட்ட 29 சதவீத மரணங்களுக்கு கொரோனா காரணமாக இருந்தது. இது 32 லட்சம் உயிரிழப்புகளுக்குச் சமமாகும். அவா்களில் 27 லட்சம் போ் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனா்.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட 6 – 7 மடங்கு அதிகம்.
கொரோனா தொற்றால் பலியானவா்களின் இறப்புச் சான்றிதழ்களில் அதுதொடா்பான தகவல்களை முழுமையாகக் குறிப்பிடாதது, கொரோனா பாதிப்பை நாள்பட்ட நோய்களால் ஏற்பட்ட பாதிப்பு என தவறாகக் கணித்தல் போன்ற காரணங்களால் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.