அமெரிக்காவில் கருப்பின இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் ஜாா்ஜியா மாகாணம், ஸ்டாலியா ஷோா் பகுதியில் கடந்த 2020 ஆண்டு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஹ்மது ஆா்பெரி (25) என்ற கருப்பின இளைஞரை வெள்ளை இனத்தைச் சோ்ந்த ட்ராவிஸ் மெக்மைக்கேலும் அவரது தந்தை கிரேகரியும் ஜீப்பில் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனா்.
அவா்களுடன் ஆா்பெரியை விரட்டிச் சென்ற வில்லியம் பிரான், அந்தச் சம்பவத்தை விடியோ படம் எடுத்தாா்.
இதுதொடா்பான வழக்கில், ஆா்பெரியை திருடா் என்று கருதி சுட்டுக் கொன்றதாக குற்றவாளிகள் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.