நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு பிரேசிலில் கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நீர்வீழ்ச்சிக்கு படகுகளில் சுற்றுலா பயணிகள் பலர் சென்றுள்ளனர். மோட்டார் படகுகள் மூலம் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை ஒன்று விழத் தொடங்கியுள்ளது. இதைப்பார்த்த படகில் இருந்த சிலர் வேகமாக செல்லுங்கள் என கத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் பாறை உடைந்து 3 படகுகளின் மேல் விழுந்தது.
இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 20 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
URGENTE!!! Pedras se soltam de cânion em Capitólio, em Minas, e atingem três lanchas. pic.twitter.com/784wN6HbFy
— O Tempo (@otempo) January 8, 2022