இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 243 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 364 கடற்படை வீரர்கள், அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து ஜனவரி 8 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
அதன் படி 243 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் அய்.என்.எஸ் குணவர்தன பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் கே.எச்.டீ.எஸ் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.
மேலும், கடற்படை வீரர் எம்.ஏ.எஸ்.டீ வீரசிங்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் என்.பி.டீ சாரங்க சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், 243 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ´பெரகும்பா´ பிரிவு விருது பெற்றுள்ளது.
243 வது ஆட்சேர்ப்பின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.
கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக மகா மகாசங்கத்தினர் மற்றும் அனைத்து மதகுருமார்கள், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் வருன பிர்டினேன்டர்ஸ் உட்பட கடற்படையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.