நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்று (10) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டங்கட்டமாக மீள கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் முழுமையாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாததால், அனைத்து மாணவர்களும் தமக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே கொண்டு வருமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)