உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில் அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
வெகு மாதங்களுக்குப் பிறகு பாடசாலைகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பாலா உள்ளிட்ட நகரப் பகுதிகளில் சாலைகளில் பாடசாலைகள் மாணவர்கள் செல்லும் காட்சிகளைக் காண முடிந்தது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகளாக உகாண்டாவில் பாடசாலைகள் திறக்கப்படவேயில்லை.
உலகிலேயே மிக நீண்ட பொதுமுடக்கமாக இது பார்க்கப்படுகிறது. அதாவது, உகாண்டாவில் கடந்த 83 வாரங்களாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை. இதனால் சுமார் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.