உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31.10 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.51 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன.
கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் என்ற பல மடங்கு உருமாறிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 311,019,858 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 5,511,955 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 260,557,401 போ் குணமடைந்துள்ளனர். சுமாா் 44,950,502 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 93,327 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,661,272 ஆகவும், பலி எண்ணிக்கை 861,336 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,869,947 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 483,936 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,558,695 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 620,142 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.