கதிர்காமம் பிரதேச சபையின் தலைவரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக்க அமில் ரங்கனவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறைகள் தோற்கடிக்கப்பட்டன.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், தலைவருக்குப் பதிலாக பிரதித் தலைவரை பதில் தலைவராக நியமிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், தலைவருக்கு அப்பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம் என ஊவா மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கதிர்காமம் பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.