தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. டாஸ்மாக் மதுபான கடைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவை பிரிவு செயல்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வோர் அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.