பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவை விமர்சிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார்.
சித்தார்த்தின் ட்விட்டர் பதிவுக்கு நாடு முழுவதிலும் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இதைத் தொடர்ந்து, சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியது:
“சாய்னா நேவால் குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எங்களிடம் இரண்டு புகார்கள் வந்துள்ளன. அவரது கருத்து மட்டும்தான் எங்களுக்குத் தேவை.”