சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கடந்த இரு திரைப்படங்களும், ஓடிடி-யில் வெளிவந்தாலும், சூப்பர்ஹிட்டானது. அதிலும், கடந்த வருடம் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலகளவில் IMDB ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து சென்சேஷன் சாதனையை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்துள்ளார் சூர்யா. ஆம், எதற்கும் துணிந்தவன் படத்திலும், நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்துள்ள புகைப்படம், இதனை உறுதி செய்துள்ளது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website