முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒருபகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.