அம்பலாங்கொட – எல்பிட்டிய பிரதான வீதியில் கரன்தெனிய – கெருவ சந்தியில் இடம்பெற்ற பயங்கர விபத்து ஒன்று சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
வீதியின் இடது பக்கம் பயணித்த கார் வீதியின் இடது பக்கம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க சுவரும் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.