ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த 27ந் திகதி உள்ளூர் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாக தமது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்தை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது சாதி குறித்து இழிவாக பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். மேக்வாலின் முதுகில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.