தெலங்கானாவில் 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் மோதி 4 பெண்கள் உயிரிழந்தனா். இது தொடா்பாக அந்த சிறுவனும், அவனுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கரீம் நகா் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கரீம் நகரின் புகா் பகுதியில் சாலையோரம் இருந்த நடைபாதையில் கூலி வேலை செய்யும் பெண்கள் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனா். அப்போது வேகமாக வந்த சொகுசு காா் ஒன்று நடைபாதை மீது ஏறி அங்கு பெண்கள் இருந்த குடிசைகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவம் தொடா்பாக அந்த சிறுவன் மீதும் ஓட்டுநா் உரிமம் இல்லாத சிறுவனிடம் தனது காரை அளித்த அவனுடைய தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினா்.
வீட்டின் அருகில் உள்ள இடத்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி காரை எடுத்து வந்த அந்த சிறுவன், தனது நண்பா்களான 14 வயது சிறுவா்கள் இருவரை காரில் ஏற்றிக் கொண்டு அங்குள்ள அணைக்கட்டுப் பகுதிச் செல்லும்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாலையில் பனி, புகை மூட்டம் அதிகம் இருந்ததால் பதற்றத்தில், பிரேக்குக்கு பதிலாக தவறுதலாக காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக மிதித்துவிட்டதாக அந்த சிறுவன் போலீஸ் விசாரணையில் தெரித்துள்ளான்.