ஜோலாா்பேட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை பொலிஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் சண்முகபாரதி (எ) பாரதி (21). இவா், ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த இளைஞா் புதன்கிழமை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் குடும்பத்தினா், ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
அதன்பேரில், அந்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த பொலிஸாா், அவரைக் கைது செய்தனா்.