இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த டிசம்பர் மாதம் வெளியான பிரமாண்ட திரைப்படம் புஷ்பா.
தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இந்தியளவில் பிரபலமான நடிகராகவும் இருந்து வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இப்படம் வெளியானது.
பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் டாப்பாக இருந்த இப்படத்தை வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இதனிடையே இன்றுடன் இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் மொத்த வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளனர்.
ஆம், புஷ்பா திரைப்படம் 50 நாட்களில் மொத்தம் ரூ.365 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.