சென்னை பாண்டிபஜாரில் இருக்கும் வணிக வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீ கொழுந்துவிட்டு எரிய தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து இருக்கின்றனர்.
இந்த விபத்து நடந்த போது பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் தனது குடும்பத்துடன் அங்கு சிக்கிக்கொண்டாராம். அது மட்டுமின்றி அங்கு சுமார் 70 நபர்கள் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்துவிட்டு நடிகர் ஸ்ரீகுமார் உட்பட மக்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கின்றனர்.
ஜீ தமிழ் தொடர்கள் மூலம் பாப்புலர் ஆன ஸ்ரீகுமார் தற்போது சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் தீ விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியா ஏற்படுத்தி இருக்கிறது.