நீர் கால்கள் குற்றும்
என் உள்ளங்கையின் உயர் பீடங்களினை
ஏந்திக் கொள்கிறேன் உனக்காய் ..
தடக்காமல்
தளராமல் நடந்து வா ..
நீர் உனைப்
பற்றியிழுத்து உன்
பாகம் மேயலாம் !
காற்று உன்னைக்
கட்டியனைத்து
காதல் மொழி பேசலாம் !
கற்கள் காமம் கொண்டுன்
கழுத்து வரையேறி
புற்களின் நுனியாகி
கிச்சு கிச்சும் மூட்டலாம் !
ஏன் ..
சில்லூறிகள் கூட உனைச்
சீண்ட வரலாம் !
ஆலா வட்டமிட்டு
ஆடையின் மேலால் பார்த்து
ஆசைவந்துனைத் தூக்கலாம் !
கால் ஆடையினைத் தூக்காதே
ஆந்தைக் கூட்டமங்கே
அண்ணாந்து பார்த்திருக்கு ..
முயல்களெல்லாம்
உன்னால் மூச்சையாகி
முடியாமல் படுத்திருக்கு ..
காடெல்லாம் கலவரமாகி
3ம் உலகப்போரது உன்னாலும்
மூழலாம் !
தொட்டாற் சினிங்கியுனை
கட்டிக்கொள்ளக் கைகள் தாவ
முள்ளாய் உந்தன் பார்வை
முறித்து எனைப் போட்டுவிட
சொல்லாய் ஒரு மொழியே
சுவைப்பேன் பெரு மொழியே
மெல்லே நீராடு
மெதுவாகி நீரோடும் ..
வில்லே குற்றாதே
விரல் கொண்டு
எனைச் சுற்றாதே ..
அல்லி நிலத்தேறி
உனை
அள்ளிக் குளத்தேறும் ..
வீடு சொல்லி வந்தாயோ ?
விளையாடி என் விதியே
வென்றாயோ ?
நன்றே செய்து வினை
இன்றே கொய்து எனை
உண்டே போட்டுக் கனை
முவ்தா மொட்