இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, ஏப்ரல் 1-ந் தேதி முதல் குளிர்காலம் முடிந்து வைரஸ் பரவல் குறைவாகிறபோது, பொதுமக்களுக்கு இலவச, அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நாங்கள் நிறுத்துவோம். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டத் தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும்.