அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தற்போது தடை விதித்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான உக்ரைன் தைரியத்துடன் போரிட்டு வருகிறது. புதின் அடுத்தடுத்த போர்களின் மூலம் லாபங்களைப் பெறலாம். ஆனால் எதிர்காலத்தில் இதற்கெல்லாம் அவர் அதிக விலைகொடுக்க வேண்டிவரும். உக்ரைன் நாட்டு மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்று கூறினார்.