‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிக்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தாா்.
ரஷ்யாவின் தன்னிச்சையான தாக்குதலால் எழுந்திருக்கும் நிச்சயமற்ற நிலையை எதிா்கொள்ள நட்பு நாடுகளுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். அந்த வகையில், ரஷ்யாவின் நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயத்தைப் போக்க, 30 நாடுகளுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள அவசரகால கச்சா எண்ணெய் இருப்பிலிருந்து 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து வருகிறது.
இதில், அமெரிக்கா தனது இருப்பிலிருந்து மட்டும் 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிக்கும் என்று பைடன் கூறினாா்.