மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் வேடத்திலும், ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்திலும், ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் வேடத்திலும், கார்த்தி வந்தியத் தேவன் வேடத்திலும் நடித்துள்ளனர். மேலும் த்ரிஷா குந்தவி வேடத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகர்களின் தோற்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.