உக்ரனைில் கடைகள், எரிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவைக்கு வெளியே அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதில், செர்னிஹிவ் மற்றும் கிவ் நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, உக்ரைனின் பல்வேறு எல்லை பகுதிகளிலிருந்து ஹங்கேரி, ஸ்லோவாகியா மற்றும் ருமேனியா நாடுகளுக்கு தஞ்சய அடைய முயற்சிக்கும் மக்களையும் இந்த புகைப்படங்களில் காணலாம்.
கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதை உள்ளூர் அலுவலர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கடந்த வாரம், ரஷியா படையெடுக்க தொடங்கியதிலிருந்து ரஷ்ய படையின் கட்டுப்பாட்டுக்கு செல்லும் முதல் பெருநகரம் கெர்சன் ஆகும்.
இதுகுறித்து பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஜெனடி லகுதா டெலிகிராம் மூலம் வெளியிட்ட செய்தியில், “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ளனர். மிகவும் ஆபத்தாக தெரிகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.
துறைமுக நகரமான கெர்சனின் மக்கள் தொகை 2.9 லட்சமாகும். ரஷிய ராணுவம் நகரின் மேயர் இகோர் கோலிகேவ் கூறுகையில், “எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆக்ரோஷமாக இருக்கவில்லை. நாங்கள் நகரத்தை பாதுகாக்க வேலை செய்கிறோம். படையெடுப்பின் விளைவுகளை சமாளிக்க முயற்சி செய்துவருகிறோம்.
இறந்தவர்களின் உடலை சேகரித்து அடக்கம் செய்தல், உணவு மற்றும் மருந்து விநியோகம், குப்பை சேகரிப்பு, விபத்து மேலாண்மை போன்றவற்றில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம்” என்றார்.