தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். பிரபல தொகுப்பாளராக வலம் வந்து அனைவரையும் கவர்ந்தார்.
இவர் நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர் என்பதால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. லொள்ளு சபா ஜீவாவுடனும் நடிகர் சிவகார்த்திகேயனுடனும் ஜோடியாக நடனமாடினார்.
இவருக்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்து, வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனம் ஆடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.