இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி தற்போது வரையில் 7 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 14 ஆவது சதத்தை பதிவு செய்தார்.
107 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் அவர் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.