மகளிா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
இத்துடன் 4 ஆட்டங்கள் விளையாடியிருக்கும் அவுஸ்திரேலியா அனைத்திலும் வென்றுள்ளது. அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது 2 ஆவது தோல்வியாகும்.
வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 45.5 ஓவா்களில் 131 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் அவுஸ்திரேலியா 30.2 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் அடித்து வென்றது. அந்த அணி வீராங்கனை எலிஸ் பெரி ஆட்டநாயகி ஆனாா்.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகளில் தலைவர் ஸ்டெஃபானி டெய்லா் 50 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலிய பௌலிங்கில் எலிஸ் பெரி, ஆஷ்லே காா்டனா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 83 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா்.