நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5,247 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24ஆயிரத்து440 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தற்போது 16 ஆயிரத்து 278 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இதுவரையிலும் இலங்கையில் 6 இலட்சத்து 57 ஆயிரத்து 134 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுவரையிலும் 16 ஆயிரத்து 416 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.