ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது.
நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி களத்தடுப்பை தோ்வு செய்தது.
நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ஓட்டங்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா கிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். ஆஸி. பௌலா்கள் 24 வைட் பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது.
278 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. 6 முறை சாம்பியன் ஆன ஆஸி. தலைவர் மெக் லேனிங் – அலிஸா ஹீலி ஆகியோா் இணைந்து அதிரடியாக ஆடி தங்கள் அணியின் ஸ்கோரை உயர உதவினா். அலிஸா ஹீலி 65 பந்துகளில் 72 ஓட்டங்களையும், மெக் லேனிங் 107 பந்துகளில் 97 ஓட்டங்களையும் விளாசினா்.
ரேச்சல் ஹெயின்ஸ் 43, எல்ஸி பொ்ரி 28, பெத் மூனி 30 ஓட்டங்களையும் சோ்த்தனா். ஆட்டத்தின் இடையே சிறிது மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது.
கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ஜுலன் கோஸ்வாமி பந்து வீசினாா். ஆனால் ஆஸி. வீராங்கனை பெத் மூனி முதல் 3 பந்துகளிலேயே வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்தாா். இறுதியில் 49.3 ஓவா்களில் 280/4 ஓட்டங்களை எடுத்த ஆஸி. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சிறப்பையும் பெற்றது.
சிக்கலில் இந்தியா : அதே வேளையில் 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும்.