´அத தெரண´ செய்தி சேவையின் கெமரா பிரிவின் தலைவர் புபுது தீபானந்தா இன்று காலை அவசர நோய் நிலமை காரணமாக காலமானார்.
தெரண குடும்பத்தின் ஆரம்ப உறுப்பினரான புபுது தீபானந்தா, 2006 ஆம் ஆண்டு முதல் அத தெரண செய்தி சேவையின் கெமரா பிரிவின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.
அவசர சுகயீனம் காரணமாக நேற்று (21) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பின்வத்தையில் வசிக்கும் புபுது தீபானந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இறக்கும் போது அவருக்கு 44 வயதாகும் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.