அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற வந்த 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச் சேர்ந்த எம். ஜினதாச பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வேனில் எரிபொருள் எடுக்க வந்த நபர் வரிசையில் மூன்றாவது நபராக நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அத்துருகிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த போது பெட்ரோல் பங்கில் நெரிசல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.
அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.