இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருளின் அளவை பொறுத்து எதிர்காலத்தில் மின்வெட்டு நேரத்தை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு மாத்திரமே போதுமான எண்ணெய் உள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இப்போது எங்களிடம் உள்ள எரிபொருளின் அளவின்படி, இன்றைய தினம் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.