கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை.