முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்படாத நபர்களை பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடை செய்து சுகாதார அமைச்சர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சுதேச வைத்தியர் டானிஸ்டர் டி சில்வா, பேராசிரியர் எப்.எம். ஜயதிலக உள்ளிட்ட குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.