பிரசன்ன மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்தினால் நேற்று (30) பிரசன்ன மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிக பணப்பரிவர்த்தனை விகிதங்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.