பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியில் லொறி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்தில் வந்த லொறி கேம்பியன் தமிழ் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் உள்ள கல்லூரி கட்டிடத்தின் மீது லொறி கவிழ்ந்துள்ளது.
விபத்து இடம்பெறும் போது கட்டிடத்தில் பல மாணவர்கள் இருந்துள்ள நிலையில், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.