பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸாரால் இவ்வாறு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.