தொடரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஐந்து வான் கதவுகளும் மூன்று அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் அலுவலகத்தின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் கடந்த மூன்று நாட்களாக மாலை வேளையில் கடும் மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்தும் மழை பெய்தால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்க வேண்டி ஏற்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதவிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.