தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 4 டிப்போக்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)