எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை மொனராகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை நீண்ட வரிசை காணப்பட்டது.
அனுமதி வழங்கப்பட்டவர்களை தவிர ஏனையவர்களுக்கு கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படாமையினால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்க்கொண்டனர்.
இதன் காரணமாக எரிபொருள் இன்றி வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் தாங்கிகளை ஓட்டுனர்கள் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்திற்கு செல்வது எமது கெமராவில் பதிவாகி இருந்தது.