விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிய தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
களனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையே சுமார் 10 வாகனங்கள் ஒன்னுடன் ஒன்று மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளன.
இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வாகனங்கள் ஒரு மருங்கையில் மாத்திரம் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.