பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் வகையறா படத்துக்காக ரூ. 5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். இப்பிரச்னை தொடர்பாக விமல் மீது நான்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு விளக்கமளித்த விமல், தன்னைத் தான் சிங்காரவேலன் ஏமாற்றி விட்டதாகப் புகாரும் அளித்திருந்தார்.