காதல் ரோஜா பூ போன்றது, சிலருக்கு அது மலர் இதழ்கள் போன்றும், சிலருக்கு காம்பின் முற்கள் போலவும் ரிசல்ட் தருகிறது அவ்வளவு தான் வித்தியாசம். இதில் காம்பை பிடித்து இரத்த காயம் அடைந்த… அதாவது காதல் தோல்வி அடைந்த நபர்கள், சில காலம் கடந்து அவர்களது முன்னாள் காதலன் / காதலியை கண்டால் மனதில் என்ன தோன்றும் என்ற சில கேள்விகள்.
நிச்சயம் நேர்மையாக காதலித்த நபர்களுக்கு குமுறல்கள் வரும், மனதுக்குள் அழுதுக் கொண்டு, உதட்டில் மட்டும் புன்னகைத்து நகரும் ஆட்களும் இருப்பார்கள். ஆனால், கண்டிப்பாக மனதினுள் சில எண்ணங்கள் தோன்றும் அல்லவா? அந்த பட்டியலில் நாம் கீழே கேட்டுள்ள வினாக்கள் உங்கள் மனதில் எழுந்ததுண்டா என்று கூறுங்கள்….
கேள்வி
சில காலம் கழித்து நேரில் காணும் போது இவன் / இவளையா காதலிச்சோம்!!! ச்சே!!! என்று உங்களுக்கு என்றாவது எண்ணத்தில் தோன்றியதுண்டா???
கேள்வி
அவரை கண்டதும், லவ்தீக நினைவுகள் மனதில் தோன்றி, அதே இடத்தில் ஓரிரு நிமிடங்கள் நின்றதுண்டா…..?
கேள்வி
மீண்டும் காதலை புதுப்பிக்கலாம் என்ற எண்ணங்கள் என்றாவது தோன்றியது உண்டா?
கேள்வி
இனிமேல் லவ்வே பண்ணிடக் கூடாது டா சாமி, ஒருதடவ பட்டதே போதும்!!! என்ற எண்ணங்கள் வந்ததுண்டா?
கேள்வி
இவன் / இவ முன்னாடி வேற ஒருத்தர லவ் பண்ணி, கெத்தா வாழ்ந்து காட்டனும் என்ற எண்ணம் வந்திருக்கா?
கேள்வி
அவன்/ அவள், சில காலம் கடந்து பார்க்கும் போது சீன் போட்டு, உலக அழகி / அழகன் ரேஞ்சுக்கு சீன் போடறாங்களே என்று கடுப்பானது உண்டா?
கேள்வி
எதை காரணம் காட்டி உங்களை விட்டு சென்றாரோ, அதை தகர்த்து, பெரிய ஆளாகி, அவர் முன்பு.. லட்சியத்தில் வெற்றிபெற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என்று உத்வேகம் அடைந்தது உண்டா?
கேள்வி
அல்லது, நேரில் கண்டதுமே, யார் என்று தெரியாதது போல முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவீர்களா?