உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 போன்ற வெற்றி படங்களின் வசனகர்த்தாவான இரா.முருகனின் மகன் முருகன் அஸ்வின் பெங்களுருவில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளார்.
இதுவரை ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத அவரை புனே அணி 4.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
தென்ஆப்பிரிக்க நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டெய்ன் கூட 2.3 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனார்.
லெக் ஸ்பின்னரான அஸ்வின் இதுவரை தமிழக அணிக்காக மட்டுமே ஆடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.