‘அட்டக்கத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் நடிப்பில் தற்போது ‘அஞ்சல’ படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (பிப்ரவரி 12) முதல் வெளியாகவிருக்கிறது.
தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நந்திதா தன்னுடைய சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்த்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நமக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொள்வதுதான் செல்பி.
ஆனால், அறிமுகமே இல்லாத ஒருவருடன் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக்கொள்வது என்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது என்றால் என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால், செல்பி எடுப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.
சில ரசிகர்கள் செல்பி என்ற பெயரில் நடிகைகளின் மேல் உரசிப் பார்ப்பது, அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பரவலாக இருந்து வருகிறது. இதனாலேயே நந்திதா செல்பி எடுப்பதை தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.