இன்று தான் லிங்குசாமி, விஷால் கூட்டணியில் தயாராக இருந்த சண்டக்கோழி 2 படம் கைவிடப்பட்டது என்ற தகவலை கூறினோம்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து லிங்குசாமி ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தமிழ் பதிப்பை தயாரிக்க, தெலுங்கு பொறுத்த வரை அல்லு அர்விந்த் கவனிக்க இருக்கிறார்.
இது அல்லு அர்ஜுனுக்கு முதல் தமிழ் படம். மேலும் இப்பட தகவல்கள் உறுதியாக இருந்தால் ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இப்படத்துக்கு லிங்குசாமி முன்னுரிமை கொடுத்ததால் தான் சண்டக்கோழி 2 படத்தை விஷால் கைவிட்டு விட்டாராம்.