இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இறுதிச்சுற்று படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள்.
அதிலும் அந்த மீன் விற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது, அதில் மாதவனை கலாய்ப்பது போல் இருக்கும், அந்த காட்சியில் மனதில் அத்தனை பயத்தை வைத்துக்கொண்டே நடித்தேன்’ என கூறியுள்ளார்.