நடிகை பிரீத்திஜிந்தா தான் நடிக்கும் இந்திப்படம் ஒன்றுக்கு கதாசிரியராக அப்பாஸ் டைரேவாலா என்பவரை கடந்த 2012–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவருக்கு பிரீத்தி ஜிந்தா ரூ.21 லட்சத்துக்கான காசோலை (செக்) வழங்கினார். அந்த காசோலையை அவர் வங்கியில் போட்டார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காசோலைக்கு பணம் அனுமதிக்க வேண்டாம் என்று பிரீத்தி ஜிந்தா தரப்பில் இருந்து வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் காசோலை திரும்ப வந்து விட்டது.
இதனால் பிரீத்தி ஜிந்தாவுக்கு கதாசிரியர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பிரீத்தி ஜிந்தா சார்பில் வக்கீல் ஆஜராகி கதாசிரியர் சொன்னபடி பணியை முடித்து தரவில்லை என்று வாதிட்டார்.
4 ஆண்டுகளாக இந்த வழக்கு மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் பிரீத்தி ஜிந்தா கோர்ட்டில் வருகிற ஏப்ரல் 4–ந் திகதி ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.